சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்காட்டின் ஊடே கண்ணாடி நுண்ணிழைக் கம்பிவடத்தைப் பதிக்க அனுமதி கேட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுற்றுப்புற, காட்டுவள அமைச்சிடம் மனு செய்துள்ளது.
4 ஜி தொலைத்தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தக் காட்டுப் பகுதியில் உள்ள மசினக்குடி என்ற கிராமத்தின் வழியாக தெப்பக்காட்டில் இருந்து மோயார் என்ற நகர் வரை பூமிக்குக் கீழே கம்பிவடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் திட்டமிடுகிறது. இதற்கான மனு ஏப்ரல் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாகவும் மனுவை அமைச்சு பரிசீலித்து வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுமலைக்காடு அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர், ரிலையன்ஸ் ஜியோ திட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்து உள்ளார்.