தோக்கியோ: ஜப்பானை சென்ற வாரம் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கிட்டத்தட்ட 250,000 பேரை வீடுகளைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அதிகமான மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருவதாக ஜப்பானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆலோசகர் கோகாவா கூறியுள்ளார்.
ஜப்பானை: கடந்த சனிக்கிழமை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே ஜப்பானில் மீட்புப் பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் ஒரு குழுவை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் தென்மேற்குப் பகுதிக்கு அனுப்ப முன்வந்துள்ளது.