புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துப் பேசியதால் கெஅடிலான் (பிகேஆர்) கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மது கூறியுள்ளார். திரு மகாதீர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்வாருக்குக் கெடுதல் செய்ததால்தான் பலர் அம்னோ விலிருந்து விலகி பிகேஆரில் சேர்ந்தார்கள் என்பதை அவர் மறந்து விட்டார் என செய்தி யாளர்களிடம் நூர் ஜஸ்லான் தெரிவித்தார். இப்போது அன்வாரை திரு மகாதீர் சந்தித்தது பிகேஆர் உறுப்பினர் கள் பலருக்குப் பிடிக்காது.
அது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் நன்மை யாகத்தான் அமையும். ஏனென் றால் அதிருப்தி அடைந்த பிகேஆர் உறுப்பினர்கள் அக் கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று நூர் ஜஸ்லான் கூறினார். திரு மகாதீர் திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அன்வாரை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.