கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாமை பெண் உளவாளிகள் கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. வடகொரியத் தூதர் காங் சோல், தமது நாட்டின் குடிமகன் இறந்த விவகாரத்தில் கூட்டு விசாரணை நடத்த வடகொரி யாவை அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நிராகரித்தார்.
கிம் ஜோங் நாம் படுகொலை குறித்து அரசு மேற்கொண்டு உள்ள விசாரணைகளை அவர் தற்காத்துப் பேசினார். "மலேசிய காவல்துறையினரும் மருத்துவர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தங் களுடைய குறிக்கோளைச் சிறந்த வகையில் நிறைவேற்றுவார்கள்," என்றார் பிரதமர் நஜிப். நேற்று காலை வடகொரி யாவின் தூதரை அழைத்த மலே சிய வெளியுறவு அமைச்சு அவர் முன்னதாகத் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டது.