பணமெடுக்க வங்கிக்குச் சென்ற பெண்ணுக்குத் திடீர் பிரசவம்

தேகத்: பணம் எடுப்பதற்காக வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருந்த பெண்ணுக்கு அங்கேயே பிரசவமானது. உத்தரப்பிரதேச மாநிலம் தேகத் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேஷா தேவி என்ற அப்பெண், நேற்று முன்தினம் அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தார். அங்கு நீண்ட வரிசையில் பொது மக்கள் பணம் எடுக்க காத்திருந்தனர். அவர்களுடன் நிறைமாதக் கர்ப்பிணியான தேவியும் வரிசையில் நின்றார். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவுக்கு தகவல் அளித்தனர்.

ஆனால் தேவி பிரசவ வலியால் துடிக்கவே, அங்கிருந்த பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு பிரசவத்துக்கு உதவினர். அப்போது தேவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் வங்கி அதிகாரிகள் உள்ளூர் போலிசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் மூலம் தாய், சேய் இருவரையும் அருகில் இருந்த சமூக நல மையத்தில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!