3வது கோயிலில் தீ விபத்து; தேர்கள் எரிந்து சேதம்

வேலூர்: தமிழகத்தில் மூன்றாவது முறையாக மற்றொரு கோயிலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக் தர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள் ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவாலாங்காடு வடா ரண்யேஸ்வரர் கோயில் தீ விபத்துக்குப் பிறகு வேலூரில் உள்ள பொன்னியம்மன் கோயி லின் தேர்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. வேலூர் சத்துவாச்சாரி கெங் கையம்மன், பொன்னியம்மன் கோவிலின் 22 அடி உயர 2 தேர்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தன. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டாலும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது வாரமாக வெள்ளிக்கிழமைகளில் கோயில் களில் தீ விபத்து நிகழ்ந்து வருவது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம் மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தீப்பிடித்ததில் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் அடைந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!