சென்னை: படித்து முடித்து கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது மாணவர்களைத் தாக்கப் போவது அரசியலும் ஊழலும்தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் மாண வர்கள் மத்தியில் பேசிய அவர், மாணவர்கள் மத்தியில் தாம் பேசு வதற்குப் பல்வேறு வகையிலும் தடைகள் விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"அரசியலையும் ஊழலையும் எதிர்கொள்ள வேண்டுமெனில் மாணவர்களான உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு அது புரிந்துவிட்டால், அரசியலுக்கு வரும் அரசியல்வாதி கள் நியாயமாக இருப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. "நீட் விவகாரத்தில் மாணவர்க ளுக்கு இருக்கும் தெளிவு, மத்தி யில் இருப்பவர்களுக்கு இல்லை. சோறு எங்கு இருந்து வருகிறது என்பதைப் பார்த்து, விவசாயிகளை மதிக்க வேண்டும்," என்றார் கமல்.
விவசாயிகளைச் சிறுமையாக நினைக்கக் கூடாது என்று குறிப் பிட்ட அவர், விவசாயிகளுக்கு விளைபொருட்களை நியாய மான விலையில் வழங்கப்பட வேண் டும் என வலியுறுத்தினார். "திராவிடத்தை ஒழிக்க முடி யாது என்பது என் கருத்து. அது ஓர் இனம். அதுமட்டுமல்ல திரா விடம் என்பது தற்போது இந்தியா முழுவதும் பரவி கிடக்கிறது. "மகளிர் மேம்பாட்டுக்குப் பொன்னான திட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றை எல் லாம் தூசி தட்டி எடுக்க வேண்டும். நான் தமிழக முதல்வராக தேர்ந் தெடுக்கப்பட்டால் லோக் அயுக் தாவை கொண்டு வருவதற்கு முதல் கையெழுத்து போடுவேன்," என்று கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்.