அரியவகை ஆமைகள் உரிய இடத்தில் சேர்ந்தன

வனவிலங்குகளை சட்டவிரோத மாக வர்த்தகம் புரிவோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆறு ஆமைகள் மலேசியாவில் அதன் உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதுவரை அவற்றின் தற்கா லிக இல்லமாக இருந்தது ஜாலான் லேக்காரிலுள்ள 'ஏக் கர்ஸ்' எனப்படும் விலங்கு ஆய்வு, கல்விச் சங்கம். சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்துக்காக இத்தகைய அரிய விலங்கினங்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை முறியடிக்கும் சட்ட அமலாக்க அமைப்புகள் அந்த விலங்குகளை ஏக்கர்ஸிடம் ஒப்ப டைக்கும்.

இப்படி ஒப்படைக்கப்பட்ட ஆமைகளை முதலில் பராமரித்து பின்னர் அதன் உரிய இடங் களில் சேர்ப்பதே ஏக்கர்ஸின் பணி என்று விளக்கினார் அதன் துணைத் தலைமை நிர்வாகி கலைவாணன். நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், "சிங் கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் வனவிலங்கு பாதுகாப்பில் முக் கிய பங்கு வகிக்கலாம்," என்றார். "சட்டவிரோத வர்த்தகர்க ளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தந்ததில் எங்கள் சங்கம் முக்கிய பங்களித்துள்ளது." என் றார் 'ஏக்கர்ஸ்' அமைப்பின் நிறு வனரும் தலைமை நிர்வாகியுமான லுயிஸ் இங்.

'ஏக்கர்ஸ்' அமைப்பின் நிறுவனர் லுயிஸ் இங்கும் (இடது) சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்படவிருக்கும் ஓர் ஆமையைப் பார்க்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!