வனவிலங்குகளை சட்டவிரோத மாக வர்த்தகம் புரிவோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆறு ஆமைகள் மலேசியாவில் அதன் உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதுவரை அவற்றின் தற்கா லிக இல்லமாக இருந்தது ஜாலான் லேக்காரிலுள்ள 'ஏக் கர்ஸ்' எனப்படும் விலங்கு ஆய்வு, கல்விச் சங்கம். சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்துக்காக இத்தகைய அரிய விலங்கினங்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை முறியடிக்கும் சட்ட அமலாக்க அமைப்புகள் அந்த விலங்குகளை ஏக்கர்ஸிடம் ஒப்ப டைக்கும்.
இப்படி ஒப்படைக்கப்பட்ட ஆமைகளை முதலில் பராமரித்து பின்னர் அதன் உரிய இடங் களில் சேர்ப்பதே ஏக்கர்ஸின் பணி என்று விளக்கினார் அதன் துணைத் தலைமை நிர்வாகி கலைவாணன். நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், "சிங் கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் வனவிலங்கு பாதுகாப்பில் முக் கிய பங்கு வகிக்கலாம்," என்றார். "சட்டவிரோத வர்த்தகர்க ளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தந்ததில் எங்கள் சங்கம் முக்கிய பங்களித்துள்ளது." என் றார் 'ஏக்கர்ஸ்' அமைப்பின் நிறு வனரும் தலைமை நிர்வாகியுமான லுயிஸ் இங்.
'ஏக்கர்ஸ்' அமைப்பின் நிறுவனர் லுயிஸ் இங்கும் (இடது) சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்படவிருக்கும் ஓர் ஆமையைப் பார்க்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்