வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமை யான பொருளியல் தடைகளை விதித்துள்ள வேளையில் அந்தத் தடைகளுக்கு ஈரானிய அதிபர் ஹசான் ரவ்ஹானி கண்டனம் தெரிவித்துள்ளார். முதல் இரண்டு கட்டத் தடைகள் நேற்று நடப்புக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா வின் நடவடிக்கைகள் மனரீதியான தாக்குதல் என்றும் அது ஈரானியர் களிடம் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அதிபர் ரவ்ஹானி கூறியுள்ளார். புதிய தடைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்து வதால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
அரசதந்திர முயற்சி கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஈரான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளது என்றும் ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் ஈரானிய அதிபர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறவுள்ள வேளையில் அரசியல் நோக்கத்திற்காக ஈரானை பயன் படுத்துவதாகவும் திரு ரவ்ஹானி குற்றம் சாட்டினார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சட்டபூர்வ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களை பாதுகாக்க உறுதி அளித்துள்ளன.