'சன்லவ்' முதியோர் நடவடிக்கை நிலையத்துடன் ஹவ்காங் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணி செயற்குழுவும் துடிப்புமிக்க மூப் படைதல் குழுவும் இணைந்து வசதிகுறைந்த ஹவ்காங் குடியி ருப்பாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங் கின. முறுக்குகள், பலகாரங்கள், மளிகைப் பொருட்கள் கொண் டுள்ள அன்பளிப்புப் பைகள் தீபாவளியை முன்னிட்டு, ஹவ்காங் வட்டாரத்திலுள்ள 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டன.
"இதுபோன்ற காரியங்களில் பிள்ளைகளையும் ஈடுபடுத்தும் போது தொண்டூழிய உணர்வு அவர்களுக்குள் நாளடைவில் முளைக்கும்," என்றார் தன் மகளுடன் இதில் ஈடுபட்ட தாயார் திருமதி கற்பகவள்ளி லெனின், 34. முதியோர் பலரும் விரும்பும் முறுக்குகளைச் சுட உதவ முடிந்ததில் மகிழ்ச்சி தெரி வித்தார் தன் மகனுடன் இதில் கலந்துகொண்ட திருமதி மஜீதா, 42. "முறுக்கு எப்படி சுடப்படுகிறது என்பதை பார்ப்பதுடன் அதனை செய்வதற்கும் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. இது இவர் களுக்குப் புதுமையான கற்றல் அனுபவம்," என்று தொண்டூழி யர்களில் ஒருவரான 35 வயது திருமதி புவனேஸ்வர் கணேசன் தெரிவித்தார்.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்
குடியிருப்பாளர் ஒருவரது வீட்டில் அன்பளிப்புப் பைகளைக் கொடுத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த தொண்டூழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்