காஷ்மீரில் பேருந்து புரண்டு விழுந்து 12 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் நகருக்கு அருகே ஒரு பேருந்து புரண்டு பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்ததாக நேற்றுத் தக வல்கள் தெரிவித்தன. காயம் அடைந்தவர்களில் பல ரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அந்தப் பேருந்து, லோரான் என்ற நகரில் இருந்து சென்று கொண்டிருந்ததாகவும் வழியில் மாண்டி பகுதியில் ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் சறுக்கிக்கொண்டு பேருந்து விழுந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்புப்பணி கள் தொடர்ந்தன. விபத்தில் கொல்லப்பட்டவர் களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அதிகா ரிகள், பேருந்து ஓர் ஆற்றின் அருகே விழுந்து கிடந்ததாகவும் அதிலிருந்து பல உடல்களையும் அந்தப் பகுதி மக்கள் வெளியே மீட்டதாகவும் குறிப்பிட்டனர்.

லோரான் என்ற நகரிலிருந்து பூஞ்ச் நகருக்குச் சென்றுகொண்டிருந்த போது ஒரு பேருந்து வழியில் சறுக்கிக்கொண்டு புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதில் மாண்டவர்களின் உடல்களை கிராமத்தினர் வெளியே மீட்டனர். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!