சிங்கப்பூருக்கு வரும், இங்கிருந்து செல்லும் அனைத்து 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்களும் சேவையிலிருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியன் ஏர்லைன்சின் இதே ரகத்தைச் சேர்ந்த 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 157 பேரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங் களுக்காக இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளது.
இந்த ரக விமானச் சேவை தடை நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடப்புக்கு வந்தது.
இதே ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன் சின் (எஸ்ஐஏ) துணை நிறுவன மான சில்க்ஏர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரி விக்கப்பட்டது.
ஆனால், 'போயிங் 737-800' ரகத்தைச் சேர்ந்த 17 விமானங் களுக்கு பாதிப்புக் கிடையாது என்று எஸ்ஐஏ குறிப்பிட்டது.
தற்போது 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத், காத்மாண்டு, கோலாலம்பூர், பினாங்கு, புக்கெட், புனோம் பென், டார்வின், ஹிரோஷிமா உள்ளிட்ட நகர்களுக்குச் சேவை புரிகின்றன.
சேவைத் தடையால் பாதிக்கப் படும் பயணிகளைத் தனது நிறு வனம் தொடர்புகொள்ளும் என்று எஸ்ஐஏ கூறியது.
சிங்கப்பூர்: ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானங்கள் சேவை நிறுத்தம்
13 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2019 10:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!