அரிசி ஏற்றுமதிக்கு கம்போடியா தடை
31 Mar 2020 10:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Mar 2020 10:33
நோம்பென்: கம்போடியா அரசாங்கம் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்ளூர் தேவையை உறுதி செய்யும் நோக்கத்தில் சில வகை அரிசிக்கு ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். கம்போடியா ஆண்டுக்கு 500,000 டன் அரிசி ஏற்றுமதி செய்கிறது. உலகிலேயே அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னமாம் மூன்றாவது இடத்தில் உள்ளது.