கொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை

மணிப்பூரின் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 22 வயது அஞ்சலி ஹ்மங்டே, அந்நோயால் இறந்த தமது தந்தைக்கு பிரியாவிடை கொடுக்க மூன்று நிமிடங்களே கொடுக்கப்பட்டிருந்தன.

கொரோனா தொற்றியிருப்பதாகச் சந்தேகப்படும் அந்தப் பெண், தமது தந்தையின் சவப்பெட்டிக்கு முன் தேம்பித் தேம்பி அழுவதைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. முழு பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்த அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூற அவள் தாயாரும் உறவினர்களும் நெருங்க முடியவில்லை. தங்களது கைக்கடிகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் மூன்று நிமிடங்கள் கழித்து அந்தப் பெண்ணை உடனே அங்கிருந்து தனிமைப்படுத்தும் நிலைத்திற்குத் திரும்ப அழைத்துச் சென்றனர்.

சென்னையிலிருந்து மணிப்பூருக்குத் திரும்பிய பிற மாநில குடியேறிகளுக்கான சிறப்பு ரயில் சேவையில் பயணம் செய்திருந்தார் அந்தப் பெண். அதே சேவையில் பயணம் செய்த மற்றொருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!