சென்னை: 23ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக் கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவேண்டும் எனத் தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வாக்கு எண்ணும் பணியில் கவனத்துடனும் விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியைச் சிந்தாமலும் சிதறாமலும் பெற்று கழகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.