கொவிட்-19 கிருமித்தொற்று மிருகங்களையும் விட்டு வைப்பதாக இல்லை.
ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் தோட்டத்தில் 8 சிங்கங்களுக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஆர்ட்டி- பிசிஆர் (RT-PCR) சோதனை முடிவுகளில் இது உறுதிசெய்யப்பட்டது.
அவற்றில் 4 ஆண் சிங்கங்களும் 4 பெண் சிங்கங்களும் அடங்கும்.
உடனடியாக சிங்கங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும்படி விஞ்ஞானிகள் விலங்கியல் தோட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிங்கங்களின் நுரையீரலில் கிருமித்தொற்றின் தாக்கத்தை அறிய, அவை சீட்டி ஸ்கேன் (CT-scan) சோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஆசியாவின் ஆகப் பெரிய விலங்கியல் தோட்டங்களில் ஒன்றான ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் தோட்டம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதுவரையில், அத்தோட்டத்தில் 24க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது.