சென்னை: கடும் குடிநீர் தட்டுப் பாடு நிலவுவதால் மதுரை மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்தாண்டு பருவ மழை அதிக பலன் அளிக்க வில்லை. எனவே கோடை காலத் தில் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட நூறு வார்டுகளில் மொத்தம் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்காக தின மும் தண்ணீர் விநியோகம் செய்கி றது மதுரை மாநகராட்சி. இதற்காக வைகை அணையில் இருந்து தினமும் 115 எம்எல்டி அளவு தண்ணீர் எடுக்கப்படுவ தாகக் குறிப்பிடும் மாநகராட்சி அதிகாரிகள், ஒவ்வொரு தனி நபருக்கும் நாள்தோறும் 135 லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கின்றனர்.