உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இம்முடிவானது பொருளியல் அவசர நிலையை கொண்டு வந்தது போல் உள்ளது என்று மம்தா கடுமையாக சாடினார். இதற்கிடையே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தா பேசியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "அப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் படும் பாடுகள் பற்றி அவரிடம் எடுத்துரைத்தேன். இந்தப் பிரச்சினை குறித்துப் பேச எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அவரைச் சந்திக்க விரும்புவதைக் கூறினேன்.
செல்லா நோட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது மோடியின் உருவபொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: ஏஎஃப்பி