குடிபோதையில் தள்ளாடிய மணமகனை நிராகரித்த ராஜகுமாரி

பாட்னா: முழு மதுவிலக்கு உள்ள பீகார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிட்டு பாண்டே என்ற ஆடவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணச் சடங்குகள் நடைபெற்ற சமயத்தில் மணமகன் பிட்டு பாண்டே குடித்துவிட்டு முழு போதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் ராஜகுமாரி, பாண்டேயை மணம் புரிந்து கொள்ளமுடியாது என அதிரடியாக சபையினர் முன்னிலையில் அறிவித்தார். ராஜகுமாரியை மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானப்- படுத்தியும் அவர் கேட்கவில்லை. மதுவை மணம் முடித்- துள்ள பாண்டேயை நான் திருமணம் செய்துகொள்ள மாட் டேன் எனக் கூறி ராஜகுமாரி அங்கிருந்து வெளியேறினார். பீகாரில் குடிகார மணமகன் களை ஒதுக்கித் தள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!