லக்னோ: நாடெங்கிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் தனது தந்தையின் தொகுதியில் போட்டியிட உள்ள தாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது.
இக்கட்சி நேற்று தனது வேட் பாளர் பட்டியலை வெளியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நடத் தப்படும் தொகுதிகளுள் முக்கிய ஒரு தொகுதியாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர் தொகுதி விளங்குகிறது.
இத்தொகுதியில் போட்டியிட் டால் வெற்றி உறுதி என்பதால் தான் அத்தொகுதியை அகிலேஷ் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆசம்கர் தொகுதி அகி லேஷின் தந்தை முலாயம் சிங் யாதவின் நாடாளுமன்றத் தொகு தியாகும். கடந்த 2014 தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட முலாயம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இங்கு முஸ்லிம், யாதவ சமூ கத்தினர் அதிகமானோர் வசிக் கின்றனர். இந்த இரு சமூகமும் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிகளாகக் கருதப்படுகின்றன.
நடக்கவுள்ள தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட் டணி, காங்கிரஸ் இடையே மும் முனைப் போட்டி நிலவுகிறது.
தந்தையின் தொகுதியில் மகன் அகிலேஷ் போட்டி
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 11:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!