பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் பிரியங்கா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது உறவினர்களையும் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. அப்போது தங்கள் சொந்த நிலத்தை காலி செய்ய மறுத்ததற்காக 10 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று முன்தினம் சென்றார்.

நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காரைத் தடுத்து நிறுத்திய போலிசார் அங்குச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களைச் சந்திக்காமல் போகப் போவதில்லை எனக் கூறிய பிரியங்கா காந்தியை போலிசார் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் விடிய விடிய அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவரது உறவினர்கள், விருந்தினர் விடுதிக்குச் சென்று பிரியங்காவைச் சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் வருவேன் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார் பிரியங்கா.

இதற்கிடையே, நேற்று காலை மருத்துவமனைக்குச் சென்ற பிரியங்கா காந்தி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்காவைக் கைது செய்து இடையூறு தந்திருப்பது பாஜக அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்னிச்சையான அதிகாரப் போக்கையே வெளிப்படுத்தியுள்ளதாக அவரது சகோதரர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!