பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய 6 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு; ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று (டிசம்பர் 29) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு அத்தகைய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களது பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று இருப்பதை உறுதி செய்தது.

பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்குத் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உருமாறிய கொரோனா கிருமித்தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அத்தகைய புதிய வகை கொரோனா கிருமித்தொற்று தமிழகத்தில் பரவும் வாய்ப்பு குறைவு எனவும் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!