விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி தண்டவாளத்துக்குள் விழுந்த ஒரு கல்லூரி மாணவி, ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கித் தவித்ததைக் காட்டிய காணொளி சமூக ஊடகத்தில் தீபோல பரவியது.
துவ்வடா ரயில் நிலையத்தில் நேற்று காலை சிக்கிக்கொண்டார்.
அன்னவரத்தில் குண்டூர்-ராயகடா விரைவுரயிலில் நேற்று காலை ஏறினார் விக்னன் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவி சசிகலா.
துவ்வடா எனும் ஊரில் ரயில் சிறிது நேரம் நின்றபோது சசிகலா அவசரமாக இறங்கியதில் தடுக்கி விழுந்துவிட்டார்.
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய அவர் உதவி கேட்டு சத்தமிட்டார்.
நல்ல வேளையாக அவரது சகப் பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கொடுக்க, ரயில் நிறுத்தப்பட்டது.
மாணவியின் பாதம் திரும்பி, ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை
Really a Great job by #RailwayRPF staff, Rescued a lady passenger who caught in between Compartment coach and Platform today while De-boarding at #Duvvada Station . She was saved by breaking the platform carefully and was shifted to nearby Hospital. #Vizag 🙌 pic.twitter.com/NjKJGyrYip
ரயில் நிலையத்துக்கு விரைந்த அதிகாரிகள், ஒன்றரை மணி நேரம் முயன்று மாணவியை விடுவித்தனர்.