ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய மாணவி (காணொளி)

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி தண்டவாளத்துக்குள் விழுந்த ஒரு கல்லூரி மாணவி, ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கித் தவித்ததைக் காட்டிய காணொளி சமூக ஊடகத்தில் தீபோல பரவியது.   

துவ்வடா ரயில் நிலையத்தில் நேற்று காலை சிக்கிக்கொண்டார்.

அன்னவரத்தில் குண்டூர்-ராயகடா விரைவுரயிலில் நேற்று காலை ஏறினார் விக்னன் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவி சசிகலா. 

துவ்வடா எனும் ஊரில் ரயில் சிறிது நேரம் நின்றபோது சசிகலா அவசரமாக இறங்கியதில் தடுக்கி விழுந்துவிட்டார். 

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய அவர் உதவி கேட்டு சத்தமிட்டார்.  

நல்ல வேளையாக அவரது சகப் பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கொடுக்க, ரயில் நிறுத்தப்பட்டது. 

மாணவியின் பாதம் திரும்பி, ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை

  

ரயில் நிலையத்துக்கு விரைந்த அதிகாரிகள், ஒன்றரை மணி நேரம் முயன்று மாணவியை விடுவித்தனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!