ஆந்திராவில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கித் தவித்த மாணவி மரணம்

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட மாணவி இறந்துவிட்டார். 

மாணவி சசிகலாவை அதிகாரிகள் நேற்று விடுவித்து மருத்துவமனையில் சேர்த்தனர். 

ஆனால் அவர் காயங்கள் காரணமாக வியாழக்கிழமை அன்று இறந்தார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரயில் நிலையத்தில் 20 வயது கல்லூரி மாணவி சசிகலா ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி  தண்டவாளத்துக்குள் விழுந்தார். 

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கித் தவித்ததைக் காட்டிய காணொளி சமூக ஊடகத்தில் தீபோல பரவியது.

 
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

ஒன்றரை மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு மாணவி காப்பாற்றப்பட்டார். 

ரயில்வே அதிகாரிகள் அவரை எடனடியான அருகில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.   ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வியாழன் அன்று உயிர் இழந்தார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!