ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட மாணவி இறந்துவிட்டார்.
மாணவி சசிகலாவை அதிகாரிகள் நேற்று விடுவித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் காயங்கள் காரணமாக வியாழக்கிழமை அன்று இறந்தார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரயில் நிலையத்தில் 20 வயது கல்லூரி மாணவி சசிகலா ரயிலிலிருந்து கீழே இறங்கியபோது தடுக்கி தண்டவாளத்துக்குள் விழுந்தார்.
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கித் தவித்ததைக் காட்டிய காணொளி சமூக ஊடகத்தில் தீபோல பரவியது.
Really a Great job by #RailwayRPF staff, Rescued a lady passenger who caught in between Compartment coach and Platform today while De-boarding at #Duvvada Station . She was saved by breaking the platform carefully and was shifted to nearby Hospital. #Vizag 🙌 pic.twitter.com/NjKJGyrYip
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஒன்றரை மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு மாணவி காப்பாற்றப்பட்டார்.
ரயில்வே அதிகாரிகள் அவரை எடனடியான அருகில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வியாழன் அன்று உயிர் இழந்தார்.