மொயீனிடம் சிக்கி தொடரை இழந்த இந்தியா

சௌத்ஹேம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா தோல்வி யைத் தழுவியுள்ளது. இதன் விளைவாக டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. அதிரடியாகப் பந்து வீசி இந்திய வீரர்களின் விக்கெட்டு களைச் சாய்த்த மொயீன் அலி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்தடித்தது. அதன்படி முதலில் களம் இறங்கி முதல் இன்னிங்சில் அது 246 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையுடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 271 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 245 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி னார்கள். லோகேஷ் ராகுல் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரை அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!