போதிய நேரம் கொடுக்கப்பட்டால் இணைய ஊடுருவிகள் எந்த அமைப்பின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் பலவீனங்களையும் கண்டுபிடித்துவிடலாம் என்றும் தற்போதைய பாதுகாப்பு நடவடிக் கைகள் போதாது என்றும் அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆலோ சனை அமைப்பின் முன்னைய இயக்குநர் கீய்த் அலெக்சாண்டர் நேற்று தெரிவித்தார். சிங்ஹெல்த் இணையத்தாக்கு தலை ஆராயும் விசாரணைக் குழுவின்முன் வாக்குமூலம் அளித்த திரு அலெக்சாண்டர், அரசாங்கமும் வர்த்தக நிறுவனங் களும் இணைந்து தகவல் பரிமாற்றங்களுக்கு வழிசெய்யும் முறைகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இவற்றின் வழியாக அமைப்புகள், தொடர்ந்து கற்றுக்கொண்டு தேவைப்படும் தடுப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில், சிங்ஹெல்த் சுகாதாரக் குழுமத்தின் தரவுத்தளத்தில் ஊடுருவிகள், 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களையும் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட 160,000 பேரின் வெளிநோயாளி மருந்து விவரங்களையும் திருடியது குறித்து விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. "நாம் எதிர்நோக்கும் மிரட்டல், நமது பாதுகாப்பு நடவடிக்கைகளை விஞ்சியுள்ளது. பாதுகாப்பு நடவ டிக்கைகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்," என்று ஐயர்ன்நெட் இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு அலெக்சாண்டர் தெரிவித்தார்.
பொது அடையாளம் தொடர் பான அக்கறைகளால் இணையப் பாதுகாப்பு தொடர்பான தகவல், நச்சுநிரல்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகே பகிரப்படுவதை அவர் சுட்டினார். ஆனால், சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை களுக்கான இணைய பாதுகாப் புக்கு ஒட்டுமொத்த ஒத்துழைப்பு தேவை என அவர் கூறினார். இணைய தாக்குதல் தொடர்பான பாவனைப் பயிற்சிகளும் நடத்தப் படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இணைய நடவடிக்கை களை ஆராய்ந்து மிரட்டல்களை அடையா ளம் கண்டு எச்சரிக்கும் முறைக் கான தேவையை திரு அலெக் சாண்டர் வலியுறுத்தினார்.