தியோங் பாரு ரோட்டில் பாதசாரி ஒருவர்மீது காரை மோதிய 42 வயது ஊபர் ஓட்டுநருக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் வாகனம் ஓட்டுவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்சைச் சேர்ந்த 42 வயதான திரு எர்வின் டெலாகனா பெர்மிஜோ மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கார் மோதியதை அடுத்து, அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல், அதே நாளில் இறந்துபோனார். விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற ஊபர் ஓட்டுநர் சோ ஹான் சியோங், சீனப் புத்தாண்டை குடும்பத்தாருடன் கொண்டாட, $15,000 பிணையுடன் அனுமதி அளித்தார் நீதிபதி லியூக் டான். அடுத்த மாதம் 11ஆம் தேதி அவர் தனது தண்டனையைத் தொடங்குவார். கவனக்குறைவால் நோக்கமில்லா மரணம் விளைவித்ததற்காக சோவுக்கு ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்பட்டிருக்கலாம்.
மரணம் விளைவித்த விபத்தில் ஊபர் ஓட்டுநருக்கு 2 வார சிறைத் தண்டனை
10 Jan 2019 08:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!