நாளை ஜனவரி 21ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு இன்று பிற்பகலே வேலைகள் தொடங்கிவிட்டன. தைப்பூசத்தன்று கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் அன்னதானத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்றே அண்ணதானத்திற்குத் தேவையான காய்கறிகளை வெட்டும் பணி தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75க்கும் அதிகமான தொண்டூழியர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கிட்டத்தட்ட 4 நேரம், வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய் போன்ற பலவகையான காய்கறிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து முருகக் கடவுளை வழிபடுவதுடன் மதிய உணவு நேரத்தில் வழங்கப்படும் அன்னதானத்திலும் கலந்துகொள்வது வழக்கம்.
தைப்பூசத் திருவிழா: 10,000 பேருக்கு உணவு
20 Jan 2019 21:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2019 21:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!