இலவசமாக பரோட்டா தருமாறு கேட்டுக்கொண்டே இருந்த முருகன் ஜோசஃப், அது கிடைக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் கடைக்காரரைத் தாக்கித் தலையில் நான்கு சென்டிமீட்டர் காயத்தை விளைவித்தார். இக்குற்றத்திற்காக நேற்று நீதிமன்றத்தில் 45 வயது முருகனுக்கு பத்து மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
வேலையில்லாத முருகன் இரு நண்பர்களுடன் கிளமெண்டியில் உள்ள 'ஹபிப்ஸ் எக்ஸ்பிரஸ்' உணவுக்கடைக்குச் சென்ற ஆண்டு ஜூலை 29ஆம் தேதியன்று மாலை 5.15 மணியளவில் சென்றிருந்தார். அங்கு பரோட்டா வேண்டும் என்று கேட்டபின் அது தயாரானதும் பணமில்லை என்று கூறிய முருகனுக்குக் கடை உதவியாளர் பரோட்டா தர மறுத்துவிட்டார். அதனால் கடைக்காரரைத் தகாத சொற்களில் திட்டி, அங்கிருந்து போனவர்கள் மறுபடியும் கடைக்கு வந்து பரோட்டா வேண்டுமென்று மிரட்டினர். மூன்றாவது முறையாக மறுக்கப்பட்டபோது முருகன் கத்தியால் சமையல்காரரைத் தாக்கினார். மூவரும் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடந்த சமயத்தில் முருகன் குடிபோதையில் இருந்ததாகவும் ரத்த பரிசோதனை உறுதிப்படுத்தியது. மற்ற இருவர் மீதுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன.
பரோட்டா கடைக்காரரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, பிரம்படி
9 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Feb 2019 02:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!