இந்த உலகத்தில் தமக்குப் பிடித்த மான நபர் என்றால் அது தனது தாய்தான் என்றும், அவருக்கு அடுத்தபடியாக ரஜினி சாரைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்றும் கூறி யுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ரஜினி யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார் என்றும், யார் குறித்தும் தவறாகப் பேசமாட்டார் என்றும் பாராட்டினார்.
"ரஜினி என்னை ஏமாற்றிவிட்டார் என்றோ, துரோகம் செய்தார் என்றோ யாராலும் சொல்ல முடியாது. ரஜினி சார் குறித்து சிலர் தவறாகப் பேசுவதையும் விமர்சிப்பதையும் அவ ரிடம் சொல்லியிருக்கிறேன். அதை யெல்லாம் கேட்ட பிறகு, 'விட்டுத் தள்ளுங்க தம்பி. ஆண்டவன் பார்த்துக்கொள்வார்' என்று பதில் அளிப்பார் ரஜினி.
"என்னைப் பொறுத்தவரை எதி ரிக்கும் உதவும் ஒரு மனிதன் இருப்பார் என்றால் அது ரஜினிதான்.
"எப்போதுமே தனது ரசிகர்களிடம் முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்றும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரஜினி அடிக்கடி சொல்வார்.
"அவர் சொல்வதைக் கேட்டு ரசி கர்கள் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சரியாக நடந்து முடியும்," என்று லாரன்ஸ் கூறியபோது பலத்த கைத்தட்டல் எழுந்தது.
லாரன்ஸ்: ரஜினிகாந்த் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்
21 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!