புதுடெல்லி: அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் 27ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது குஜராத்தின் அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.750 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டதாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் குற்றம் சாட்டியிருந்தனர். அப்போது இந்த வங்கியின் இயக்குநராக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருந்தார். தற்போது வங்கியின் இயக்குநராக உள்ள அஜய் படேல், ராகுல் காந்திக்கு எதிராக அஹமதாபாத் கூடுதல் தலைமை பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மே 27ஆம் தேதி ராகுல் காந்தியும் ரன்தீப் சுர்ஜேவாலாவும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
ராகுல் காந்தி நேரில் முன்னிலையாக குஜராத் நீதிமன்றம் உத்தரவு
10 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!