சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட குரங்கு, அணில், ஓணான் போன்ற பிராணிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தாய்லாந்தில் இருந்து வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த சுரேஷ், 28, என்பவரை விசாரித்தபோது அவரிடம் நான்கு பெட்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
அவற்றில் 12 பச்சோந்திகள், ஓணான்கள், இரண்டு சிறிய ரக குரங்குகள், முக்கோண அணில்கள், தென் அமெரிக்க அரிய மூன்று குரங்குகள் ஆகியவையும் இதர விலங்குகளும் இருந்தன.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், விமான நிலையத்துக்கு வெளியே இதர இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர்.
பறிமுதலான உயிரினங்களில் நான்கு அணில்கள் இறந்துவிட்டன. மற்றவற்றை தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.