போபால்: கடும் மழையின் காரண மாக மலை போன்று குவிந்து கிடக்கும் வெங்காயம் அழுகிப் போவதைத் தடுக்க அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்க மத்தியப்பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அரசு கிடங்கு களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரூ.3.28 லட்சம் குவின்டால் வெங் காயத்தை மக்களுக்கு இலவச மாக வழங்க உள்ளதால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த வருடம் மே மாதம் அதிகள விலான வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டதால் இதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தந்தது. இதன் காரணமாக வெங்காய உற்பத்தியாளர்களிடையே பதற்றம் நிலவியது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ வெங்காயம் 6 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதன்படி விவசாயிகளிட மிருந்து 10.4 லட்சம் குவின்டால் வெங்காயம் கொள்முதல் செய்யப் பட்டது. பருவ மழைக்காலம் துவங் கிய நிலையில் உரிய சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் வெங் காயங்கள் அழுகத் துவங்கின. இதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை மாநில அரசு விற்பனை செய்ய எண்ணியது. ஆனால், வெங் காயத்தை வாங்குபவர்கள் மிகக் குறைந்தபட்ச விலையையே வெங் காயத்திற்கு நிர்ணயம் செய்தனர்.
இந்நிலையில், வெங்காயத்தை இலவசமாக விநியோகம் செய்ய மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயத்தைக் கொண்டு வந்து தருவதற்கேற்ற போக்கு வரத்து செலவுக்காக கிலோவுக்கு ரூ.1 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வெங் காயச் சந்தையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரம் திகழ்கிறது. ஆனால், வெங்காயத் தைப் பயிரிடும் விவசாயிகள் அதற்குரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதால் குறைந்த பட்ச விலையையாவது நிர்ணயம் செய்யாவிடில் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி உள்ளனர்.