தேசிய சேவையாற்றுவதற்கு முன்பே எந்தப் பிரிவில் சேர்ந்து சேவையாற்ற விரும்புகிறார்கள் என்பதை முழுநேர தேசிய சேவை யாளர்கள் தெரிவிக்கலாம். இந்த நடைமுறை வரும் நவம்பர் மாதத்திலிருந்து தொடங் குகிறது. சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றில் உள்ள 33 பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் இணைந்து சேவை யாற்ற தேசிய சேவையாளர்கள் விருப்பம் தெரிவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்க விருப்ப மில்லை என்றும் தெரிவிக்கலாம்.
இந்தப் புதிய திட்டத்தில் மின்னல் படையும் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவும் இடம் பெறவில்லை. தேசிய சேவையில் சேருவதற்கு முன்பே இந்தப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த இரண்டு பிரிவுகளிலும் சேர கடுமையான நிபந்தனைகள் உள்ளன. இப்பிரிவுகளுக்கான தேர்ந்தெடுப்பு முறை மற்ற பிரிவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது.
தகுந்த உடற்திறன், குறிப் பிட்ட பொறுப்புகளை ஏற்று நடத் தும் திறனைக் கொண்டிருப்பது, குறிப்பிட்ட பிரிவில் சேரு வதற்கான தகுதியைக் கொண் டிருப்பது ஆகிய தகுதிகளையும் கருத்தில் கொண்டு தேசிய சேவையாற்ற இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.
தேசிய சேவையில் சேர இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் மத்திய மனிதவள முகாமின் இணையத்தளத்தில் தேவையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்