சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, பயங்கரவாத செயல்களுக்கான நிதிப் பட்டுவாடா ஆகியவற்றைத் தடுக்கும் வலுவான கட்டமைப்பை சிங்கப்பூரின் நிதி அமைப்பு கொண்டிருப்பதாக உலக பணிக்குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சிங்கப்பூரின் நிதி அமைப்பு மேம்பாடு காண வேண்டிய அம்சங்கள் பற்றியும் அந்த நிதித்துறைச் செயலாக்கப் பணிக்குழு (FATF) கூறியுள்ளது. உதாரணமாக அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து நிதி நிறுவனங்களின் புரிந்துணர்வை வலுப்படுத்துவது, சிக்கலான, எல்லைகள் கடந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக் குற்றச் செயல்களைத் தடுக்கும் நடவடிக் கைகள் போன்றவற்றில் அதிக மாக ஈடுபட வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டியுள்ளது.
நிதித்துறைச் செயலாக்க பணிக்குழுவின் 2008 ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதச் செயல் களுக்கான நிதிப் பட்டுவாடா நடவடிக்கைகளில் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை அடைந்துள்ளதாக உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. கறாரான தரக்கட்டுப்பாட்டை நிதித்துறை செயலாக்க பணிக்குழு 2012ல் அறிமுகப்படுத்தி யதற்கு பின் வெளிவந்துள்ள இந்த முதல் அறிக்கை, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பட்டுவாடா நடவடிக்கைகளில் பல முக்கிய பிரிவுகளில் சிங்கப்பூர் பயனுள்ள விளைவுகளைக் கண்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.