பெய்ஜிங்: கெடா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அகமட் பாஷா முகம்மது ஹனிபா நேற்று பதவி ஏற்றுக்கொண்டுள்ள நிலை யில் அவரது திறமையை நிரூபிப்பதற்கு 100 நாட்கள் அவகாசம் கொடுப்போம் என்று மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். அகமட் பாஷாவுக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துரைத்த அகமட் சாஹிட், அவருடைய குறைந்த கல்வித் தகுதியை மட்டுமே கொண்டு அவரை நிர்ணயித்து விடக்கூடாது எனத் தெரிவித் தார்.
‚அவருடைய மற்ற ஆக்ககரமான செயல்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அகமட் சாஹிட் கூறினார். ‚அகமட் பாஷா மாநில நிர்வாகக் குழு ஆலோசகராகவும் துணை அமைச்சராகவும் இருந்த வர். எனவே அவருக்கு மாநில அளவிலும் கூட்டரசு அளவிலும் நிறைய அனுபவங்கள் உள்ளன என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார். அவர் அரசியலில் 35 ஆண்டு அனுபவம் கொண்டவர் என்பதையும் மறந்துவிடக் கூடாது என அகமட் சாஹிட் கூறினார். நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ள அகமட் சாகிட், கெடா புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள அகமட் பாஷா பற்றி இவ்வாறு கூறினார்.
கெடா புதிய முதலமைச்சராக அகமட் பாஷா பதவி ஏற்றுக்கொள்கிறார். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்