உலகின் பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றாக சிங்கப்பூர் தொடர்ந்து இருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரின் சட்டம், ஒழுங்கு தொடர்ந்து சாதகமான நிலையில் இருந்து வருவதாக 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பாதுகாப்பு, இடர்காப்புச் சூழ்நிலை குறித்து நேற்று வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டை விடக் கடந்த ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருந்தாலும் இணை யக் குற்றங்கள் தவிர மற்றவை குறைந்துள்ளன. 2013ஆம் ஆண்டு முதல் இணையக் குற்றங்கள் அதி கரித்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, வீட்டை உடைத்துத் திருடுவது தொடர்பான குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளில் ஆகக் குறைந்த அளவாக கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன. அதேபோல, உரிமம் இன்றி கடன் தருவோருடைய அச்சுறுத்தல் வழக்கு களும் குறைந்து வருகின்றன. போதைப்பொருள் பயன்பாட்டில் அதிக மாற்றமில்லை. தீ விபத்துகள் குறைந்துள்ளன. தீச்சம்பவங்களால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்து குறைந்த அளவிலேயே உள்ளன. சாலைப் போக்குவரத்து விபத்துகளினால் காயமுறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித் திருந்தாலும் விபத்துகளால் மரணமடைவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பயங்கரவாதியைக் கைதுசெய்யும் பாவனைப்பயிற்சி. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்