சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் 'தூதராக' முன்பு விளங்கிய 'ஆ மெங்' மனிதக் குரங் குக்குப் பதிலாக புதிய 'ஆ மெங்' அறிமுகப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் அறிவித்துள்ளது. 'அந்தப் பெண் மனிதக் குரங்கு எது' என்பது பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் நடைபெறும் 'சஃபாரி ஸ`' ஓட்ட நிகழ்வின்போது அறிவிக்கப்படும். அந்தக் குரங்கு 'ஆ மெங்'கின் வம்சாவளியைச் சேர்ந்தது என்றும் அதன் ஆறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் என்றும் காப்பகம் தெரிவித்தது.
விலங்கியல் தோட்டத்தின் முன்னைய பிரபலமான 'ஆ மெங்' மனிதக் குரங்கு 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று மரணமடைந்தது. அப்போது அதற்கு வயது 48. அப்படி என்றால் மனித வயதில் அது 95. 'சஃபாரி ஸ` ஓட்டம்' என்பது ஆ மெங்கின் மறைவுக்குப் பிறகு அதன் நினைவாக 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
முன்னைய 'ஆ மெங்' போல புதிய 'ஆ மெங்', விலங்கியல் தோட்டத்தின் பெயரைக் கட்டிக் காக்க வேண்டும். முன்னைய 'ஆ மெங்' சுற்றுப்பயண நட்சத்திர மாக விளங்கியதால் அனைத் துலக திரைப்பட பிரபலங்கள், அரச குடும்பத்தினர் போன்றோ ருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது. 1982ல் தொடங்கப்பட்ட 'பிரேக்ஃபஸ்ட் வித் ஆ மெங்' திட்டம் மூலம் பிரபலமடைந்த அந்த மனிதக் குரங்கு சுமார் 30 திரைப்படங்களிலும் 270 கட்டுரைகளிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 2016-01-10 06:00:00 +0800