இந்தோனீசியா, வியட்னாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடு களின் பயணிகள் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து கூடுதல் எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வுகளைக் காண்பார்கள் என்று சிங்கப்பூர் நேற்று தெரிவித்தது.
இந்த நாடுகளிலிருந்து வருவோர் சிங்கப்பூருக்குப் புறப்படு வதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஏஆர்டி பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றைக் காண்பித்தால் போதுமானது. 'ஆர்டி-பிசிஆர்' சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என்று முன்பிருந்து விதி முறைக்கு மாற்றாக இந்தப் புதிய முறை அமைகிறது.
முன்பு சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அதிகமான கொவிட்-19 கிருமித்தொற்று உள்ள பட்டியலில் இருந்த 23 நாடுகளுக்கும் இந்த எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பட்டியலில் இந்தியா, லாவோஸ் போன்ற நாடுகள் இருந்தன.
இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து இந்த நாடுகளின் பயணிகள் சிங்கப்பூரில் தங்களுடைய இல்லத்தில் அல்லது தங்களுக்கு விருப்பமான ஹோட்டலில் 10 நாள் தனிமையில் இருக்க வேண்டும். தற்போது உள்ள விதிகளின்படி அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தனிமைப் படுத்தும் இடத்தில் தங்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணத் தடத் திட்டத்தில் இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து சுவீடனும் ஃபின் லாந்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விரு நாடுகளும் சிங்கப்பூர் பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வர அனு மதித்துள்ளன.
அவற்றுடன் மலேசியாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணத் தடத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதால், சிங்கப்பூருக்குள் நாள்தோறும் வரும் பயணிகளின் வரம்பு 6,000க்கு உயர்ந்துள்ளது.
எல்லைக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றி பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான சிறப்புத் தடம் நம்பிக்கையளித்துள்ளதால் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப் படுவதாக தெரிவித்துள்ளார்.