ஷங்ஹாய்: சீனாவின் ஷங்ஹாய் நகரின் இரண்டு வட்டாரங்களில் புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை. அதைத் தொடர்ந்து கிருமிப் பரவல் அலைக்கு எதிரான அந்நகரின் போராட்டம் வெற்றியடையும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்ஹாயின் சுற்று வட்டாரங்களில் இருக்கும் சில ஆலைகள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்குகின்றன.
அந்நகரில் உள்ள பிரபல மின்சார வாகன நிறுவனமான 'டெஸ்லா'வின் ஆலையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக அது மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தது.
சென்ற மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமாயான முடக்கநிலையால் ஷங்ஹாயில் வாழும் 25 மில்லியன் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.