இம்மாதம் இறுதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சொகுசுக் கப்பல் பயணங்களை ராயல் கெரீபியன் நிறுவனம் தொடங்குகிறது.
ராயல் கெரீபியன் சொகுசுக் கப்பல்கள் பினாங்கு மற்றும் கிள்ளான் துறைமுகத்துக்குச் செல்லும்.
இம்மாதம் 30ஆம் தேதியி
லிருந்து தனது 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' சொகுசுக் கப்பலில் மூன்று மற்றும் நான்கு இரவுப் பயணங்களை ராயல் கெரீபியன் வழங்கும்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இங்கிருந்து சொகுசுக் கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இம்மாதம் இறுதி தொடங்கும் சொகுசுக் கப்பல் பயணத்துக்கான பயணச்சீட்டுகளுக்கான விற்பனை நேற்று தொடங்கியது.