பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் ஓட்டுநராகப் பணிபுரிவதற்கு அதிகமான சிங்கப்பூரர்களும் பெண்களும் முன்வரவேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் மெல்வின் யோங் அழைப்பு விடுத்துள்ளார். அந்தத் துறையின் திறனை மேம்பட்டதாக்க முத்தரப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.
தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரு மான திரு யோங், பேருந்து ஓட்டும் அனுபவத்தைப் பெறும் முயற்சியாக பேருந்து ஓட்டும் பயிற்சிபெறும் இயந்திரத்தை ஓட்டி பார்த்தார். பொதுப் போக்குவரத்துப் பேருந்து மேம்பாட்டுத் திட்டத்தின் வழி 1,000 புதிய பேருந்துகள், அரசாங்கத்தின் புதிய ஒப்பந்தத் திட்டங்கள் வழி இந்தத் துறை மேம்பாடு காண்கிறது. இப்போது அத்துறைக்கு ஓட்டுநர்கள் தேவைப்படுவதாக திரு யோங் தனது வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.