உலகிலேயே முதல் முறையாக புதிய புற்றுநோய் சிகிச்சை முறை ஒன்று சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் அவதியுறும் பெண்களுக்கு இந்த சிகிச்சை நம்பிக்கை தரக்கூடும்.
இந்த பரிசோதனைச் சிகிச் சைக்கு உட்பட்டவர்களில் திருவாட்டி கோவும் ஒருவர். 1999ஆம் ஆண்டு 39 வயதில் மார்பகப் புற்றுநோய் அவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் சிகிச்சை மேற்கொண்டு நலம் அடைந்தார். 2011ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு புற்றுநோய் திரும்பியதுடன் அது, ஈரல், சுவாசப் பை என உடல் முழுக்கப் பரவியது.
தேசிய புற்றுநோய் நிலையத்தில் மேற்கொண்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை முறை சிகிச்சைக்கு அவரது மருத்துவர்கள் அவரைப் பரிந்துரைத்தனர்.
பரிசோதனை முறை சிகிச்சையில் மருத்துவர்கள் உடலின் இயற்கையாக அழிக்கும் அணுக்களைப் (கில்லர் செல்ஸ்) பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோயின் கடைசி கட்ட வளர்ச்சியைத் தடுத் தனர். தற்போது தமக்கு பசியெடுக்கிறது என்றும் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ள தாகவும் திருவாட்டி கோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.2016-07-04 11:05:00 +0800