மத்திய சேமநிதி (மசேநிதி) பணம் ஓய்வுகாலத்திற்கும் வீடு, சுகாதாரத் தேவைகளுக்கும் பயன்படுத் தப்பட வேண்டிய ஒன்று. அவசரசத் தேவைகளுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்குமல்ல என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று கூறியிருக்கிறார். அதனால்தான் மக்கள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப பணத்தை எடுக்க இந்த திட்டம் அனுமதிக்காது என்றார் அமைச்சர். அவர் மக்கள் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார். மத்திய சேமநிதி செயல்முறை பற்றி பல தவறான கருத்துக்கள் நிலவுவதால் அதைப்பற்றி தெளிவு படுத்த வேண்டும் என்றார் அமைச்சர். "நமது உறுப்பினர்களின் தேவைகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதால் 'பொக்கிமோன்' போல மசேநிதி மாற்றம் பெற்று வருகிறது," என்றார் அமைச்சர்.
கடந்த இரண்டு மாதங்களில் மசேநிதி செயல்முறையில் மாற்றங்கள் பற்றிய தகவல் வெளியா னது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இடையே மசேநிதி திட்டங்கள் பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்ற கருத்து நிலவியது. எந்த ஆண்டுத்தொகை திட்டத்தை தெரிவு செய்வது என்ற குழப்பம் பலரிடம் ஏற்பட்டது. மக்களிடம் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய சேமநிதிக் கழகம் பல தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து அமுல்படுத்தவிருக்கிறது என்று நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மசேநிதி அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதால் மசேநிதி பணத்தை அவரசத்திற்கு எடுத்துக் கொண்டு பின்னர் திருப்பிக் கொடுக்கும் மாற்றுத் திட்டத்தை அனுமதிக் கப்போவதில்லை என்றார் அமைச் சர்.
மசேநிதி எதற்காக? என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 300 அடித்தளத் தலைவர்களிடம் உரையாடும் அமைச்சர் லிம் சுவீ சே. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்