வசந்த காலத்தின் தொடக்கம் வட இந்தியாவில் 'ஹோலி' எனும் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது. மற்றவர்களின் மேல் வண்ணங்களைப் பூசி கொண்டா டப்படும் இந்த விழா, அண்மையில் சிங்கப்பூரிலும் பிரபலமடைந்து வருகிறது. 'ரங் டி ஹோலி' எனப்படும் நிகழ்ச்சியை நேற்று கெம்பாங்கான் சாய் சீ சமூக மன்றத்தின் இந்தி யர் நற்பணிச் செயற்குழுவும் சிங்கப்பூர் போஜ்புரி சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்தது. 15வது முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் வட இந்தியர்க ளுடன் தமிழர்கள், சீனர்கள், சுற் றுப்பயணிகள் என 5000க்கு மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.
சிறியவர், பெரியவர் என்று பல இன மக்கள் பெரும் எண்ணிக்கையில் நேற்று கெம்பாங்கான் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள திடலில் திரண்டனர். படம்: திமத்தி டேவிட்