முன்னாள் கைதிகளின் மறுவாழ் வுத் திட்டங்களுக்கு உதவி புரி யும் மஞ்சள் நாடா திட்ட நன் கொடைக்கு மொத்தம் $1.1 மில் லியனுக்கு மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது. அதில் $209,200 தொகையை மினி என்வைரன்வெண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகம்மது அப்துல் ஜலீல் வழங்கினார். சுமார் 600க்கு மேற்பட்ட நிறு வனங்களும் தனிநபர்களும் இந்த நன்கொடை திரட்டுக்குத் தாராளமாக நிதி அளித்து உள் ளனர். நன்கொடையாளர்கள் அனை வருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் நாடா திட்ட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் மினி என்வைரன்மெண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகம்மது அப்துல் ஜலீலும் கைகுலுக்கிக் கொண்டனர். படம்: பெரித்தா ஹரியான்