பொதுச் சேவையின்பால் தாம் ஈர்க்கப்பட 20 ஆண்டுகளுக்கு மேலாக போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய தமது தாயாரே முக் கிய காரணம் என்று மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். உள்துறைக் குழு பயிற்சிக் கல் லூரியில் சுமார் 650 போலிஸ் அதிகாரிகள், தொண்டூழிய போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் பங்கேற்ற 'சிங்கப்பூர் போலிஸ் படையில் பெண்களின் 70 ஆண்டு காலப் பணி' எனும் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய திருவாட்டி டியோ, பெண் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய தம் தாயாரின் தியா கங்களை எடுத்துரைத்தார். "உண்மையில், பெண் போலிஸ் அதிகாரிகள் என்ற முறையில் வேலையையும் குடும்பத்தையும் ஒரே சமயத்தில் நிர்வகிப்பது எளி தான காரியமன்று. நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோவுக்குப் பக்கத்தில் தாயார் திருவாட்டி லியாவ் சீ சூ (கறுப்பு மேலாடையுடன்) உள்ளார். படம்: சாவ் பாவ்
'பொதுச் சேவையில் சேர என் தாயாரே எனது ஊக்கம்'
1 mins read
-

