பிடோக் நார்த் பகுதியில் உள்ள ஒரு சாலையில் வேகமாக ஓடி ரோட்டைத் தாண்டிய ஒரு பள்ளி மாணவி மயிரிழையில் விபத்திலிருந்து தப்பித்தார்.
இம்மாதம் 11ஆம் தேதி காலை 7.22 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தை திரு ஏரிக் என்ற ஒட்டுநரின் கார் புகைப்பட கருவி பதிவு செய்தது.
அந்த காணொளியில் ஒரு பெண்ணும் இரண்டு பள்ளி மாணவிகளும் ஒரு கார் நிறுத்தம் இடத்தில் அமைந்துள்ள ரோட்டை தாண்ட முயல்வதைக் காணலாம்.
அதில் ஒரு மாணவி ஒரு காருக்குப் பின்னால் ஓடியபோது எதிர்வரும் டாக்சியைப் பார்க்காமல் சென்று விட்டார்.
“அந்த சிறுமியின் கண்ணுக்ந்த் தெரியாத இடத்திலிருந்து காடி வரும் சூழ்நிலை அது. நல்லவேளையாக டாக்சி ஓட்டுநர் தக்க நேரத்தில் நிறுத்திவிட்டார்,” என்றார் திரு ஏரிக்.
செய்தி: ஸ்டோம்ப்