இவ்வாண்டு டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுத் தொகை $16 மில்லியன். டோட்டோ வரலாற்றில் இதுவே ஆகப் பெரிய தொகை எனக் கூறப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வாண்டுக்கான பரிசுத் தொகையே ஆக அதிகம் என சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சென்ற ஆண்டு பரிசுத் தொகை $8 மில்லியன்.
சென்ற வியாழக்கிழமை நடை பெற்ற டோட்டோ குலுக்கலில் $1.5 மில்லியன் பரிசுத் தொகை யாருக் கும் கிடைக்கவில்லை. திங்கட் கிழமை நடந்த $4 மில்லியன் குலுக்கலிலும் வெற்றியாளர் இல்லை. அதனால் இந்தத் தொகை எதிர்வரும் குலுக்கலில் சேர்க்கப் பட்டு $16 மில்லியனாக அறிவிக்கப் பட்டது. சீனப் புத்தாண்டையொட்டிய மாபெரும் டோட்டோ குலுக்கல் வெள்ளிக்கிழமை (11 பிப்ரவரி) இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.