புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், "உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5வது வரிசையில் பந்தடிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். டோனியைப் பொருத்தமான அந்த இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஆடும் லெவன் அணியின் கலவை எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவானும், 3வது வீரராக விராத் கோஹ்லியும் களம் இறங்க வேண்டும். 4வது வீரராக யாரையும் இறக்கலாம், ஐந்தாவது வீரராக டோனியைக் களம் இறக்க வேண்டும். அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியாவை களம் காண வைக்கலாம். தரமான பந்தடிப்பாளர் எந்த வரிசைக்குத் தகுந்தபடியும் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஐபிஎல் போட்டியில் ஹார்திக் பாண்டியா பந்தை நன்கு கணித்து அடித்து ஆடினார்.
அவர் முறையான கிரிக்கெட் 'ஷாட்'களை அடிக்கிறார். அவர் நல்ல நம்பிக்கையுடன் உலகக் கிண்ணப் போட்டிக்குச்
சென்றுள்ளார்.
அந்த நம்பிக்கைக் களத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இடக்கை பந்தடிப்பாளரான ஷிகர் தவான், வலது கை பந்தடிப்பாளருடன் பங்காளித்துவம் அமைத்து ஆடுகையில் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். அவர் பங்காளித்துவம் ஆட்டத்தில் நிலைத்து நின்றால் எதிரணிப் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணி கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
நான்காவது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரை இறுதிக்குள் நுழையும் என்றார் சச்சின்.